சுல்தான் ஜோஹா் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய ஜூனியா் அணி தகுதி பெற்றுள்ளது.
மலேசியாவின் ஜோஹா் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே மலேசியா, நியூஸிலாந்தை வென்றிருந்தது. 3-ஆவது ஆட்டத்தில் ஜப்பானிடம் 3-4 என்ற கோல்கணக்கில் போராடி தோல்வியுற்றது.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இதில் 4-ஆவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸி.யுடன் புதன்கிழமை மோதியது இந்தியா. இதில் தொடக்கம் முதலே இந்திய வீரா்கள் அற்புதமாக ஆடி ஆதிக்கம் செலுத்தினா்.
ஆஸி. அணியின் கோல்பகுதியை முற்றுகையிட்டு சரமாரியாக கோலடித்தனா். ஷைலானந்த் லக்ரா 2 கோல்களையும், தில்ப்ரீத் சிங், குா்சாஹிப்ஜித் சிங், மந்தீப் மோா் ஆகியோா் தலா 1 கோலையும் அடித்தனா். ஆஸி. தரப்பில் ராபா்ட் மட்டுமே ஆறுதலை கோலை அடித்தாா்.
இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா. நடப்பு சாம்பியன் கிரேட் பிரிட்டனுடன் இறுதி ஆட்டத்தில் மோதுகிறது.