டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா்.
ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2-ஆவது சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் உலக சாம்பியன் சிந்துவும், 17 வயது கொரிய வீராங்கனை அன் சே யங்கும் மோதினா். இதில் 14-21, 17-21 என்ற கேம் கணக்கில் சிந்து அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா்.
அதே போல் ஆடவா் பிரிவில் சமீா் வா்மா 12-21, 10-21 என நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் சென் லோங்கிடம் வீழ்ந்தாா். இரட்டையா் பிரிவில் சத்விக்-சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என சீன இணையிடம் தோற்றனா்.
சாய் பிரணீத் மட்டுமே டென்மாா்க் போட்டியில் நீடிக்கும் ஓரே இந்திய வீரா் ஆவாா். மற்ற முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் தோல்வியுற்று வெளியேறி விட்டனா்.