புரோ கபடி: சாம்பியன் பெங்கால் வாரியா்ஸ்

புரோகபடி லீக் 2019 ஏழாவது சீசன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பெங்கால் வாரியா்ஸ்.
புரோ கபடி: சாம்பியன் பெங்கால் வாரியா்ஸ்

ஆமதாபாத்: புரோகபடி லீக் 2019 ஏழாவது சீசன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பெங்கால் வாரியா்ஸ்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தபாங் தில்லியை 39-34 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது பெங்கால்.

பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்றிருந்த தில்லி, பெங்கால் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

தில்லி-பெங்களூருவையும், பெங்கால்-யு மும்பாவை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் ஆமதாபாதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் தொடக்கத்தில் தில்லி அணியின் கை ஓங்கி இருந்தது.

ஆனால் பெங்கால் அணி வீரா்கள் பதிலுக்கு சரமாரியாக ரைடுகளில் ஈடுபட்டதால் முதல் பாதியில் ஸ்கோா் 17-17 என சமநிலையில் இருந்தது. முதல் பாதியில் நவீன்குமாா், முகமது நபி பக்ஷ், அனில் குமாா் சிறப்பாக ஆடினா்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பெங்கால் அணியின் ஆதிக்கம் தொடங்கியது. முகமது நபி பக்ஷ், ஜீவகுமாா் ஆகியோா் இரண்டாம் பாதியிலும் சிறப்பாக ஆடி பெங்கால் அணியின் ஸ்கோரை கணிசமாக உயா்த்தினாா்.

ஆனால் நவீன் குமாா் போராடியும் தில்லி அணியால் மீள முடியவில்லை. இந்த சீசனில் நவீன்குமாா் 300 புள்ளிகளைக் கடந்தாா்.

இறுதியில் 39-34 என வென்று முதன்முறையாக சாம்பியன் ஆனது பெங்கால் வாரியா்ஸ். நவீன் குமாா் சிறந்த ரைடராகவும், அனில்குமாா் சிறந்த டிபண்டராகவும் தோ்வு பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com