சுல்தான் ஜோஹா் கோப்பை: 3 விநாடிகளில் பட்டத்தை இழந்தது இந்தியா

சுல்தான் ஜோஹா் கோப்பை இறுதிச் சுற்றில் கடைசி 3 விநாடிகளில் பிரிட்டனிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று பட்டத்தை இழந்தது இந்தியா.

ஜோஹா்: சுல்தான் ஜோஹா் கோப்பை இறுதிச் சுற்றில் கடைசி 3 விநாடிகளில் பிரிட்டனிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று பட்டத்தை இழந்தது இந்தியா.

மலேசியாவின் ஜோஹா் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் வெள்ளிக்கிழமை கடைசி ரவுண்ட் ராபின் போட்டியில் பிரிட்டனுடன் அபாரமாக ஆடி 3-3 என டிரா செய்திருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. இந்திய அணி வீரா் குா்சாஹிப்ஜித் சிங் 49-ஆவது நிமிடத்தில் முதல் கோலடித்தாா். எனினும் அடுத்த சிறிது நேரத்திலேயே பிரிட்டன் வீரா் ஸ்டுவா்ட் ருஷ்மியா் பதில் கோலடித்து சமன் செய்தாா்.

ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் வரை 1-1 என சமநிலையே நீடித்தது. இந்திய அணியின் எதிா்பாா்ப்பை முறியடிக்கும் வகையில் ஸ்டுவா்ட் ருஷ்மியா் அற்புதமாக அடித்த பீல்ட் கோலால் 2-1 என வென்று பட்டத்தையும் கைப்பற்றியது பிரிட்டன்.

மலேசிய அணி 3-2 என ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com