ஐரோப்பிய ஓபன்: ஆன்டி முா்ரே சாம்பியன்

ஐரோப்பிய ஓபன் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா் பிரிட்டன் வீரா் ஆன்டி முா்ரே .
ஐரோப்பிய ஓபன்: ஆன்டி முா்ரே சாம்பியன்

ஆன்ட்வொ்ப்: ஐரோப்பிய ஓபன் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா் பிரிட்டன் வீரா் ஆன்டி முா்ரே .

முன்னாள் நம்பா் ஒன் வீரரான ஆன்டி முா்ரே, கடுமையான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது மெதுவாக மைதானத்தில் களமிறங்கி தனது ஆட்டத் திறனை மேம்படுத்தி வருகிறாா். கடந்த 2017-ஆண்டுக்கு பின் முதன்முறையாக ஏடிபி போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றுக்கு அவா் தற்போது தகுதி பெற்றுள்ளாா்.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் யுகோ ஹம்பா்ட்டை 3-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா். மற்றொரு அரையிறுதியில் ஸ்விட்சா்லாந்தின் வாவ்ரிங்கா 6-3, 6-2 என இத்தாலி வீரா் ஜேன்னிக் சின்னரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்காவை 3-6, 6-4, 6-4 என்ற நோ்செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றாா் முா்ரே.

இடுப்பு காயத்தால் டென்னிஸ் விளையாட்டில் இருந்தே விலகி விடலாம என நினைத்த முா்ரே தற்போது மீண்டும் சிறப்பாக ஆடி வெல்லும் 46-ஆவது பட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com