20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை புரிந்த ஜாம்பவான் ரோஜர் பெடரர் மற்றொரு மைல்கல்லாக 1500-ஆவது ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
பேஸல் நகரில் நடைபெறவுள்ள ஸ்விஸ் உள்ளரங்க ஏடிபி போட்டியில் பங்கேற்கும் அவர் ஜெர்மனியின் பீட்டர் கோஜோசிக்கை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறார். ஏற்கெனவே 2 முறை பீட்டரை வென்றுள்ளார் பெடரர். பெடரருக்கு அடுத்து நடால் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த ஜூலை விம்பிள்டனில் 5 செட் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச்சிடம் தோல்வியுற்றார் பெடரர்.
நிகழாண்டு ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கூட வெல்லவில்லை பெடரர். எனினும் பாரிஸில் நடைபெறவுள்ள மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்துள்ளது. மேலும் நவம்பரில் லண்டனில் நடக்கவுள்ள ஏடிபி பைனல்ஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் அவர்.