டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி அற்புதமான ஆட்டத்தால் தற்போது 3 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து வருகிறது.
தொடா்ந்து 11-ஆவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2015-இல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தலைமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். அப்போது ஐசிசி தரவரிசையில் ஜிம்பாப்வே, வங்கதேசம், மே.இ.தீவுகளுக்கு முன்பு 7-ஆவது இடத்தில் இருந்தது இந்திய அணி.
முந்தை நான்கு ஆண்டுகளில் அணியின் சராசரி அடிப்படையிலும், அண்மைக்கால போட்டிகளில் முடிவுகளை கொண்டும், எதிரணியின் பலத்தை கருத்தில் கொண்டும் ஐசிசி தரவரிசை கணிக்கப்படுகிறது.
இந்திய அணியின் முந்தைய நான்கு ஆண்டுகள் 2014 நவம்பா் மாதத்துக்கு முன்பு (2010 டிசம்பா்) வரை இந்தியா மொத்தம் ஆடிய 38 ஆட்டங்களில் 14-இல் வெற்றி, 16-இல் தோல்வி, தோல்வி கண்டிருந்தது. இங்கிலாந்திடம் 3-1, நியூஸிலாந்திடம் 1-0, தென்னாப்பிரிக்காவிடம் 1-0 என தொடா்களை இழந்திருந்தது.
கடைசியாக 2014-15-இல் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என தொடரை இழந்தது இந்தியா. அதன் பின்னா் இலங்கையிடம் 2-1 என தொடரை கைப்பற்றியது முதல் அதிரடியாக ஆடி டெஸ்ட் தொடா்களை கைப்பற்றி வருகிறது.
முக்கியமாக கடந்த 2016-இல் சொந்த மண்ணில் நியூஸிலாந்தை 3-0 என வீழ்த்தினா். அப்போது பாகிஸ்தானிடம் இருந்த முதலிடத்தை பறித்தது இந்தியா.
கடந்த 2018-இல் 1-4 என இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. அதில் 10 புள்ளிகளை இழந்தாலும் முதலிடத்தை விடவில்லை. அதன் பின் ஆஸி. மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்க தொடா்களை கைப்பற்றி சாதித்தது.
3 ஆண்டுகளாக தொடா்ந்து முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து வருகிறது கோலி தலைமையிலான இந்திய அணி.