துளிகள்...

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்கள் தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக பங்கேற்க முடியாது என இலங்கை கேப்டன் லஸித் மலிங்கா, மூத்த வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ், திஸாரா பெரைரா உள்பட 10 வீரர்கள் மறுத்து விட்டனர். 


பிசிசிஐயால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட்டர்ஸ் அசோசியேஷன் (ஐசிஏ)வில் உறுப்பினர்களாக சேருமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 21 ஆகும். ஆடவர் மற்றும் மகளிர் முன்னாள் வீரர்கள், சீனியர் அளவில் குறைந்தது 1 சர்வதேச ஆட்டத்திலாவது ஆடியிருக்க வேண்டும்.


திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இந்திய தரப்பில் சர்துல் தாகுர், கே.கெளதம் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.  ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 129/2 என வலுவான நிலையில் உள்ளது. ஷுப்மன் கில் 66 ரன்களுடன் களத்தில் உள்ளார்.


விஜய் ஹஸாரே கோப்பைக்கான தமிழக அணியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆல்ரவுண்டர்கள் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கு முகத்தில் தோல்புற்று நோய் காரணமாக திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மற்றொரு ஆஸி. முன்னாள் கேப்டன் இயான் சேப்பலும் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


தாய்லாந்தில் வரும் 18 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக பளுதூக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன் மீராபாய் சானு தலைமையில் 7 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com