தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை இந்திய ஏ அணி வென்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 164 ரன்களுக்குச் சுருண்டது. ஷர்துல் தாக்குரும் கே. கெளதமும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 87.5 ஓவர்களில் 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 90 ரன்களும் ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்ஷேனா 61 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் என்ஜிடி, டேன் பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தென் ஆப்பிரிக்க ஏ அணி, 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி, 58.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ தரப்பில் நதீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு இந்திய ஏ அணி வெற்றி பெற 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்திய ஏ அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்ட நாயகனாக ஜலஜ் சக்ஷேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.