மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டிகளில், 2 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களைப் பெற்று நாடு திரும்பிய தமிழக வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், மலேசிய சிலம்ப அகாதெமி மற்றும் ஆசிய சிலம்ப அகாதெமி சார்பில் உலக அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில், தமிழகத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனையர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த, இளைய வீர தமிழர் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த வீரர்களும் சென்றிருந்தனர். இவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் உள்ளிட்ட 11 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
மலேசியாவிலிருந்து விமானம் மூலம், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில், சிலம்பாட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.