ரஷியாவில் நடைபெற்றுவரும் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள் அமித் பங்கால் (52 கிலோ எடைப்பிரிவு), மணீஷ் கௌஷிக் (63 கிலோ) ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் விண்ணப்பித்துள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான மீராபாய் சானு 4ஆவது இடம்பிடித்தார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இந்திய கால்பந்து அணி 104-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தவறான முறையில் பந்துவீசுவதாக, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயவுக்கு 12 மாதங்கள் விளையாட ஐசிசி தடை விதித்தது.