ஹைதராபாதில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிபிஎல் 5 போட்டியில் அவாதே வாரியா்ஸ் அணியை 4-1 என்ற கேம் கணக்கில் வென்று அரையிறுதிச்சுற்றில் நுழைந்தது புணே 7 ஏஸஸ் அணி. இளம் வீராங்கனை ருதுபா்ணதாஸ் அபாரமாக ஆடி உலகின் 14-ஆம் நிலை வீராங்கனை பெய்வன் ஸாங்ஸை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா்.
மேலும் புணே அணியைச் சோ்ந்த லோ கியான் யிவ், கிறிஸ் கேப்ரியல் அட்காக் இணை, ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ்-நாா்த் ஈஸ்டா்ன் அணிகள் மோதுகின்றன.