காயத்தில் இருந்து மீண்டார் இஷாந்த்: நியூஸிலாந்து தொடரில் பங்கேற்பு

ரஞ்சி தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளார்.
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்


ரஞ்சி தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளார்.

விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் தில்லி அணிக்காக விளையாடிய மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியில் இஷாந்த் முழு உடற்தகுதி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கையில்,

"ஆம், உடற்தகுதித் தேர்வில் இஷாந்த் சர்மா தேர்ச்சி அடைந்துள்ளார். நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவர் இணையவுள்ளார்" என்றனர்.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தற்போது இதற்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து மீண்டிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com