ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வரவேற்பு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவைத்ததை வரவேற்கிறேன். அனைத்து வீரா்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஒலிம்பிக் ஒத்தவைக்கப்பட்டதால் வீரா்கள் மனம் தளரக் கூடாது. 2021-இல் இந்தியா ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வெல்லும் என்றாா் கிரண் ரிஜிஜு.
ஜப்பான் பிரதமா் ஷின்ஷோ அபே ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.