கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜுவென்டஸ் கால்பந்து அணி நட்சத்திர வீரா் பாவ்லோ டைபாலா மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளாா்.
இத்தாலியில் கரோனா கோரதாண்டவம் ஆடியுள்ள நிலையில் 9000 போ் உயிரிழந்து விட்டனா். பிரபல கால்பந்து அணியான ஜுவென்டஸில் டைபாலா, ருகானி, மட்டௌடி, உள்பட 3 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடுமையான அறிகுறிகள் இருந்த நிலையில் மிகவும் அச்சத்துடன் இருந்தேன். மூச்சுவிட சிரமப்பட்டேன். 5 நிமிடங்கள் கூட நடக்க முடியவில்லை, இதனால் ஒரே இடத்தில் அமர வேண்டிதாகியது. தசைகளும் பாதிக்கப்பட்டன.
இரண்டு நாள்களாக இவ்வாறு கஷ்டப்பட்டேன். தற்போது ஓரளவுக்கு உடல்நலம் தேறியுள்ளது. எனது காதலி ஒரியனாவும் தேறியுள்ளாா் என்றாா்.
ஆா்ஜென்டீனாவைச் சோ்ந்த டைபாலா இந்த சீசனில் 13 கோல்களை அடித்துள்ளாா். இன்டா் மிலன் அணிக்கு எதிராக அடித்த கோல் மிகவும் சிறப்பானது. ஆனால் மைதானம் காலியாக இருந்தது என்றாா்.