பிஎஸ்எல் டி20 கோப்பையை வென்று கொடுத்த ஒவ்வொரு கராச்சி கிங்ஸ் வீரருக்கும் ஃபிளாட் பரிசு!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கோப்பையை வென்று தந்த கராச்சி கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும்...
பிஎஸ்எல் டி20 கோப்பையை வென்று கொடுத்த ஒவ்வொரு கராச்சி கிங்ஸ் வீரருக்கும் ஃபிளாட் பரிசு!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கோப்பையை வென்று தந்த கராச்சி கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஃபிளாட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் அந்த அணியின் உரிமையாளர்.

செவ்வாய் அன்று நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின் இறுதிச்சுற்றில் லாகூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கராச்சி கிங்ஸ் அணி. 135 ரன்கள் இலக்கை பாபர் அஸாம் அடித்த 63 ரன்களின் உதவியுடன் அடைந்தது. 

கராச்சி அணி உரிமையாளர் சல்மான் இக்பால், தன்னுடைய ரியல் எஸ்டேட் திட்டத்தில் அபார்ட்மெண்ட்களைக் கட்டி வருகிறார். இந்நிலையில் பிஎஸ்எல் கோப்பையை வென்றதற்காக கராச்சி அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு ஃபிளாட்டைப் பரிசாக அளித்துள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் செய்தியாளர் உமர் ஆர். குரேஸி தெரிவித்துள்ளார். 

2003 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய கங்குலி தலைமையிலான இந்திய அணியினர் ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபிளாட் பரிசாக அளிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com