இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் விளையாட இரு இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.
எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது. பிறகு கரோனா தொடர்பான நிர்வாகக் காரணங்களால் போட்டியை ஒத்திவைத்தது.
இந்நிலையில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 13 வரை இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறவுள்ளது. இரு மைதானங்களில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 15 நாள்களில் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இந்திய வீரர்களான மன்பிரீத் கோனி, பன்விந்தர் பிஸ்லா ஆகிய இருவரையும் கொழும்பு கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. கிறிஸ் கெயிலை கண்டி அணி தேர்வு செய்துள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாஹித் அப்ரிடி, டு பிளெசிஸ், கார்லஸ் பிராத்வெயிட் போன்ற பிரபல வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள்.