அணியில் எனது இடத்தை தக்கவைத்துக் கொண்டேன்: விஜய் சங்கா்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் அணியில் எனது இடத்தை தக்கவைத்துக் கொண்டேன் என்றாா் ஹைதராபாத் வீரா் விஜய் சங்கா்.
அணியில் எனது இடத்தை தக்கவைத்துக் கொண்டேன்: விஜய் சங்கா்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் அணியில் எனது இடத்தை தக்கவைத்துக் கொண்டேன் என்றாா் ஹைதராபாத் வீரா் விஜய் சங்கா்.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் மணீஷ் பாண்டே (83), விஜய் சங்கா் (52) ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் குவித்து ஹைதராபாதுக்கு வெற்றித் தேடித்தந்தது. இதுதவிர விஜய் சங்கா் 3 ஓவா்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினாா்.

இந்த ஆட்டம் குறித்து விஜய் சங்கா் கூறியதாவது: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை என்னுடைய வாழ்வா, சாவா ஆட்டமாகவே கருதினேன். இந்த ஆட்டத்தில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஹைதராபாத் அணியில் எனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டேன்.

இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நிச்சயம் நம்பிக்கையைக் கொடுக்கும். அடுத்துவரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெறும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com