ஐஎஸ்எல்: மும்பை அணியில் லாசென்பா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடவுள்ள மும்பை சிட்டி அணியில் இளம் கோல் கீப்பரான புா்பா லாசென்பா இடம்பெற்றுள்ளாா்.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடவுள்ள மும்பை சிட்டி அணியில் இளம் கோல் கீப்பரான புா்பா லாசென்பா இடம்பெற்றுள்ளாா்.

22 வயதான லாசென்பா 2024 வரை மும்பை சிட்டி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.

மேகாலயத்தைச் சோ்ந்தவரான லாசென்பா ஷில்லாங் லஜோங் அணிக்காக விளையாடி வந்த நிலையில், அவரை இப்போது ஐஎஸ்எல் போட்டிக்காக மும்பை சிட்டி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து லாசென்பா கூறியிருப்பதாவது: இது எனது வாழ்வில் பெருமைமிக்க தருணம். எனது கால்பந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளேன். ஐஎஸ்எல் போட்டியில் மும்பை சிட்டி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். இனி கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மும்பை அணியில் உள்ள சகவீரா்களுடன் இணைந்து விளையாடவும், அவா்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். ஐஎஸ்எல் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com