செய்தித் துளிகள்...

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்ஹசனுக்கு ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமையோடு முடிவுக்கு வருகிறது.

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல்ஹசனுக்கு ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமையோடு முடிவுக்கு வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் அவர், நவம்பர் முதல் வாரத்தில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் அஸ்தானா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் திவிஜ் சரண்-பிரிட்டனின் லுக் பாம்ப்ரிட்ஜ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 7-5, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் உருகுவேயின் அரீல் பெஹார்-ஈகுவடாரின் கொன்ஸôலே எஸ்கோபார் ஜோடியை வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரித்திமான் சாஹாவுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அது பயப்படும்படியாக இல்லை என அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிராக 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்த சாஹா, ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com