காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் டெனிஸ் ஷபோவெலோவ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் டெனிஸ் ஷபோவெலோவ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் போபண்ணா-டெனிஸ் ஜோடி 6-4, 5-7, 7-10 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி சார்டி-ஃபேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வி கண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போபண்ணா-டெனிஸ் ஜோடி எளிதாக கைப்பற்ற, அடுத்த செட்டை பிரான்ஸ் ஜோடி கடும் போராட்டத்துக்குப் பிறகு தன்வசமாக்கியது. 
இதனால், ஆட்டம் டைபிரேக்கருக்கு செல்ல, அதில் அபாரமாக ஆடிய பிரான்ஸ் ஜோடி, போபண்ணா-டெனிஸ் ஜோடியை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக, போபண்ணா-டெனிஸ் ஜோடி தங்களுடைய 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கொலம்பியாவின் ஜூயன் செபாஸ்டியன்-ராபர்ட் ஃபாரா ஜோடியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com