கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 74, 0000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.