மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடமிருந்து பொறுமையைக் கற்றுக்கொண்டேன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மாணவர்களுடன் இணையம் வழியாக உரையாடிய கோலி கூறியதாவது:
அனுஷ்காவும் நானும் சந்தித்துக்கொண்டதில் இருந்து பொறுமையைக் கடைப்பிடிப்பதைக் கற்றுக்கொண்டேன். அதற்கு முன்பு நான் அவ்வளவு பொறுமைசாலி கிடையாது.
அவருடைய ஆளுமையும் முக்கியமான சூழல்களில் வெளிப்படும் அமைதியும் எனக்குப் பாடங்களாக உள்ளன. இருவரும் மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். கடினமான சூழல்களில் உங்களுடைய ஈகோவை விழுங்க வேண்டும், ஆபத்துச் சமயங்களில் உடன் இருப்பது, தொடர்ந்து போராடி உங்களுக்கான வழிகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை அவர் கடைப்பிடிப்பார். இதுபோன்ற நல்ல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.