கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்!

மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இல்லாததால்...
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்!


இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு வீரர் மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு ஆணைய மையம் (சாய் அமைப்பு) தெரிவித்துள்ளது.

மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கிருஷன் பதக் என ஐந்து வீரர்கள் கரோனாவால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் 4 முதல் பெங்களூரில் உள்ள சாய் அமைப்பில் ஹாக்கி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிற நிலையில் இத்தகவலை சாய் அமைப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் சாய் வளாகத்திலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆறு வீரர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்கள். அனைவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com