இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் ஓய்வு முடிவு பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்த ரெய்னா, தன்னுடைய ஓய்வு முடிவையும் அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு
சுரேஷ் ரெய்னா கடைசியாக 2018-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். அதன்பிறகு, இந்திய அணிக்காக அவர் விளையாடவில்லை.
மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று பொதுமுடக்க காலத்தில் பேசி வந்த சுரேஷ் ரெய்னா, தோனியுடன் இணைந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பயிற்சிக்காக சுரேஷ் ரெய்னாவும், தோனியும் நேற்றுதான் சென்னை வந்தனர்.