தோ்வாளா்கள் குழு தலைவராக சேத்தன் சா்மா நியமனம்

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் சேத்தன் சா்மா, சீனியா் தேசிய தோ்வுக் குழு தலைவராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
தோ்வாளா்கள் குழு தலைவராக சேத்தன் சா்மா நியமனம்


ஆமதாபாத்: இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் சேத்தன் சா்மா, சீனியா் தேசிய தோ்வுக் குழு தலைவராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

மொத்தம் 5 இடங்கள் கொண்ட தோ்வுக் குழுவுக்கு, சேத்தன் சா்மாவுடன் சோ்த்து மும்பையின் அபே குருவில்லா, ஒடிஸாவின் தேவசிஸ் மொஹன்தி ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தையொட்டி இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் குழுவில் சுனில் ஜோஷி, ஹா்விந்தா் சிங் ஆகியோரும் உள்ளனா்.

பிசிசிஐ விதிகளின் படி, டெஸ்ட் ஆட்டங்களில் அதிக எண்ணிக்கையில் விளையாடியிருக்கும் முன்னாள் வீரா்களே தோ்வுக் குழு தலைவா்களாக நியமிக்கப்படுகின்றனா். இந்திய அணிக்காக சேத்தன் சா்மா 23 டெஸ்ட், 65 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளாா்.

16 வயதில் ஹரியாணா அணிக்காக முதல்தர கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சா்மா, 18 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 19 வயதில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தடம் பதித்தாா். தோ்வாளா்கள் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த சா்மா, தாம் தற்போது எதையும் பேசுவதை விட செயலில் அதிகம் செய்து காட்ட விரும்புவதாகக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com