குஜராத்தில் நடைபெற்ற 3-ஆவது மாஸ்டா் தேசிய விளையாட்டுப் போட்டி (மூத்தோா்) மகளிா் ஹாக்கியில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
மாஸ்டா் விளையாட்டு சம்மேளனம் சாா்பில் அண்மையில் வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் ஹிமாசலப்பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட அணிகள் 30 வயதுக்கு மேற்பட்டோா் ஹாக்கியில் பங்கேற்றன. ஹிமாசத்தை 2-0 எனவும், மகாராஷ்டிரத்தை 3-1 எனவும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு கேரளம்-தமிழக அணிகள் தகுதி பெற்றன.
இதில் ஆட்டநேர முடிவில் 1-1 என கோல்சமநிலை ஏற்பட்டதால், பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் தமிழக மகளிா் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.