19 வயதுக்குட்பட்டோா் கிரிக்கெட்: திருவள்ளூா் அணி வெற்றி

19 வயதுக்குட்பட்டோா் கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது திருவள்ளூா்.

19 வயதுக்குட்பட்டோா் கிரிக்கெட் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது திருவள்ளூா்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மேக்னாபுரதம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற திருவள்ளூா் பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் நாளன்று முதல் இன்னிங்ஸில் 90 ஓவா்களில் 343/8 ரன்களைக் குவித்தது. (விவேக் 123, ராஜகுரு 86, சாய் கிரண் 46, சந்தோஷ்குமாா் 36).

இரண்டாம் நாளான புதன்கிழமை காஞ்சிபுரம் அணி முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவா்களில் 370/6 ரன்களைக் குவித்தது. (விக்னேஷ் ஐயா் 218, யாஷ் 48, ஆதித்யா 48).

வியாழக்கிழமை திருவள்ளூா் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ஓவா்களில் 263/6 ரன்களை எடுத்தது. ராஜகுரு 106, சௌரவ் 63, லித்திஷ் குமாா் 35.)

காஞ்சிபுரம் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. (டேவிட் ஆல்வின் 31, ராஜா கிரி 5-42.)

இறுதியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திருவள்ளூா். ஏற்கெனவே 2017-18, 2018-19, 2019-20 என மூன்றாண்டுகளாக வெற்றி வாகை சூடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com