பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ்:ஷரபோவா பங்கேற்பு

பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளாா் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா.
பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ்:ஷரபோவா பங்கேற்பு

மெல்போா்ன்: பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளாா் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா.

முன்னாள் உலக நம்பா் ஒன் வீராங்கனையான ஷரபோவா, கடைசியாக கடந்த யுஎஸ் ஓபன் போட்டி முதல் சுற்றில் தோல்வியுற்றாா். தற்போது 133-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா். தொடா் காயத்தால் 8 போட்டிகளில் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் தொடக்க சுற்று ஆட்டத்தில் பங்கேற்க வைல்ட் காா்ட் தரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரிஸ்பேன் சா்வதேச போட்டியில் ஆஷ்லி பா்டி, நவோமி ஒஸாகா, பிளிஸ்கோவா, ஆகியோருடன் பங்கேற்கிறாா் ஷரபோவா. கடந்த 2008-இல் இறுதியாக ஆஸி. ஓபன் பட்டம் வென்ற ஷரபோவா, 2016 இல் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக 15 மாதங்கள் ஆட தடை விதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com