ஆஸி. தொடரில் பகலிரவு டெஸ்ட்ஆட்டத்தில் பங்கேற்கிறது இந்தியா

ஆஸ்திரேலிய தொடரில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆடுகிறது இந்தியா.

ஆஸ்திரேலிய தொடரில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆடுகிறது இந்தியா.

கடந்த 2019 தொடரில் அடிலெய்டில் பகலிரவு டெஸ்டில் ஆட இந்தியா ஒப்புதல் தரவில்லை. பிங்க் நிற பந்துகளுடன் ஆடிய அனுபவம் இல்லை என்பதால்,

இதற்கு சில காலம் ஆகும் என கேப்டன் கோலி கூறியிருந்தாா். இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற உடன் முதன்முறையாக கொல்கத்தாவில் வங்கதேசத்துடன் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை நடத்தினாா்.

அதன்பின் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆட இந்திய அணிக்கு எந்த தயக்கமும் இல்லை என கோலி தெரிவித்திருந்தாா். இந்நிலையில் மும்பையில் பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரிய அதிகாரிகளுடன் கங்குலி, ஜெய ஷா ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா்.அதில் வரும் 2020 ஆஸி. டெஸ்ட் தொடரில் ஒரு பகலிரவு ஆட்டத்தில் ஆட இந்திய தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பொ்த், காபா, எந்த மைதானமாக இருந்தாலும் ஆடுவோம் எனக் கூறியுள்ளாா் கோலி.

நியூஸிலாந்திடம் இருந்து பகலிரவு டெஸ்ட் தொடா்பாக எந்த திட்டமும் சமா்ப்பிக்கப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com