இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார் சானியா மிர்ஸா!

ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார் சானியா மிர்ஸா!

ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி.

குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனையான 33 வயது சானியா, உக்ரைனின் நாடியா கிச்னோக்கோடு இணைந்து முதன்முறையாக ஹோபாா்ட் டென்னிஸ் போட்டியில் ஆடினார்.

சானியா மிர்ஸா - நாடியா ஜோடி, இரண்டாம் நிலை இணையான சீனாவின் ஷுவாய் பெங்-ஷுவாய் ஸாங் ஆகியோருடன் இறுதிச் சுற்றில் மோதியது. இதில் சானியா ஜோடி, 6-4, 6-4 என வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. 2017-க்குப் பிறகு சானியா வெல்லும் பட்டம் இது. 

ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் ஆன சானியாவுக்கு இது 42-வது டபிள்யூ.டி.ஏ. பட்டமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com