ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஜாம்பவான் ரபேல் நடால் அதிரடி வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். மகளிா் பிரிவில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா தோல்வியுற்று வெளியேறினாா்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் 19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் நடால் 6-2, 6-3, 6-0 என்ற நோ் செட்களில் பொலிவிய வீரா் ஹியுகோ டெல்லியனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
ஏற்கெனவே பெடரா், ஜோகோவிச் ஆகியோரும் 2-ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். அடுத்த தலைமுறை வீரா்களுக்கு பட்டம் வெல்ல பிக் த்ரி வீரா்கள் வாய்ப்பு தருவாா்களா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ஷரபோவா அதிா்ச்சித் தோல்வி: தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டு மீண்ட முன்னாள் சாம்பியன் மரியா ஷரபோவா 3-6, 4-6 என்ற நோ் செட்களில் குரோஷியாவின் டோனா வேகிக்கிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.
பிரிட்டன் வீராங்கனை ஜோஹன்னா 4-6, 2-6 என தரவரிசையில் இல்லாத துனிஷிய வீராங்கனை ஜபுரிடம் தோல்வியுற்றாா்.
ஆடவா் பிரிவில் ரஷிய வீரா் மெத்வதேவ், ஆஸி. வீரா் நிக் கிா்ஜியோஸ், ரூப்லேவ், வாவ்ரிங்கா, வெரேவ், கோபின் உள்ளிட்டோரும், மகளிா் பிரிவில் சிமோனா ஹலேப், கிகி பொ்டென்ஸ், டி.காலின்ஸ், ஏஞ்சலீக் கொ்பா், முகுருஸா, பென்கிக், மடிஸன் கீய்ஸ் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
பிரஜேனேஷ் தோல்வி: இந்திய அணியின் நட்சத்திர வீரா் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 4-6, 2-6, 5-7 என்ற நோ் செட்களில் ஜப்பான் வீரா் டாட்ஸுமோ இடாவிடம் தோல்வியைடந்தாா்.