2-வது ஒருநாள் ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த ஆட்ட நாயகனுக்கான பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் உள்ளிட்ட ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு வழங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்குக்காக ஆட்ட நாயகன் விருதையும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றார் கே.எல். ராகுல். இந்நிலையில் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையுடன் சேர்த்து கூடுதலாக மேலும் ஒரு லட்சத்தையும் சேர்த்து ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள விலங்குகள் சிகிச்சை மையத்துக்கு அளித்துள்ளார்.
இதுகுறித்து பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளதாவது:
எங்களுக்கு கே.எல். ராகுல் ரூ. 2 லட்சம் உதவித்தொகை அளித்துள்ளார். இப்போது மட்டும் அவர் உதவவில்லை. எப்போதும் எங்களுக்கு ஆதரவாக உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.