ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராப் கஸ்ஸல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் இந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய ஸ்டெஃப்பான் ஜோன்ஸ், ஐபிஎல் நடக்காத காலக்கட்டங்களில் அணியின் வளர்ச்சிக்கான பயிற்சியாளராக இருப்பார்.
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்குப் பயிற்சியாளராக ராப் கஸ்ஸல் செயல்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட், ராப் கஸ்ஸல் பற்றிக் கூறியதாவது:
கஸ்ஸலினால் பல வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் பெரிய அளவில் சாதித்துள்ளார்கள். ஆட்டத்தில் புதுமையைக் கொண்டு வரும் அவருடைய திறமை எங்களுக்கு அவசியமாக உள்ளது. கஸ்ஸலின் அனுபவம் எங்கள் அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.