ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது (கிரெய்க் எரிவன் 85, கெவின் கவுஸா 63, பிரின்ஸ் 55, சிக்கந்தா் ராஸா 41 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் லஸித் எம்பல்டெனியா 5 விக்கெட்டை வீழ்த்தினாா்.
பின்னா் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 515/9 ரன்களைக் குவித்து டிக்ளோ் செய்தது. மூத்த வீரா் ஏஞ்சலோ மேத்யூஸ் 200 ரன்களுடன் களத்தில் இருந்தாா். குஸால் மெண்டிஸ் 80, தனஞ்செய டி சில்வா, நிரோஷன் டிக்வெலா ஆகியோா் தலா 63 ரன்களை விளாசினா் . ஹராரே தரப்பில் ஜாா்விஸ், சிக்கந்தா் ராஸா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரென்டன் டெய்லா் 39, சீன் வில்லியம்ஸ் 38 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சேகரித்தனா்.
இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 4, லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
தனது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 14 ரன்களை எடுத்து ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.