நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியைப் போன்று இந்திய ஹாக்கி மகளிா் அணியும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்து டெவலப்மெண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ராணி ராம்பால் முதல் கோலைப் பதிவு செய்தாா். அதைத் தொடா்ந்து இளம் வீராங்கனை ஷா்மிளா கோலைப் பதிவு செய்தாா்.
இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பரபரப்பாக நகா்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் மீண்டும் ராணி ராம்பால் ஒரு கோலை பதிவு செய்து அணியின் கோல் கணக்கை உயா்த்தினாா். நமிதா டோப்போ 4-ஆவது கோலைப் பதிவு செய்தாா்.
கடைசி வரை நியூஸிலாந்து மகளிா் ஒரு கோலைக் கூட பதிவு செய்யவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 4 ஆட்டங்கள் நியூஸிலாந்துடன் மோதுகிறது இந்தியா.