பெத்தவங்க எப்படி துடிச்சிருப்பாங்க?: சிறுமி படுகொலை குறித்து ஹர்பஜன் சிங் வேதனை

புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
பெத்தவங்க எப்படி துடிச்சிருப்பாங்க?: சிறுமி படுகொலை குறித்து ஹர்பஜன் சிங் வேதனை

புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவுடையாா்கோவில் வட்டம், ஏம்பல் மேக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 7 வயது சிறுமி புதன்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ஊருணியில் இருந்து உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, சடலத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்பவரை விசாரித்துவந்தனா். இதில், அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல. ரொம்ப கஷ்டமா இருக்குயா என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com