சிபிஎல் போட்டியில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் - பிரவீன் டாம்பே

இந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் 48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.
சிபிஎல் போட்டியில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் - பிரவீன் டாம்பே


இந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் 48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வயதான வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான 48 வயது பிரவீன் டாம்பே. இவருடைய அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஆனால் இவருடைய தேர்வை ரத்து செய்தது பிசிசிஐ. ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய வீரர், வேறு எந்த உள்ளூர் லீக் போட்டியிலும் கலந்துகொள்ளக் கூடாது. ஆனால் டாம்பே 2019 அபுதாபி டி10 போட்டியில் விளையாடியுள்ளார். ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடியது பிசிசிஐ விதிகளுக்கு முரணானது. எனவே அவரால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது என்று கூறியது. 

இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் இணை உரிமையாளராக உள்ள டிரின்பாங்கோ நைட் ரைடர்ஸ் அணி, பிரவீன் டாம்பேவை 5.62 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் சிபிஎல் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்கிற பெருமை டாம்பேவுக்குக் கிடைக்கவுள்ளது.

டாம்பே, 2013-ல் 41 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். 33 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ல் குஜராத் அணிக்காக விளையாடினார். 

சிபிஎல் போட்டி டிரினாட் & டொபகோவில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com