மெல்போா்ன்: ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
குரூப் ஏ பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை மெல்போா்னில் திங்கள்கிழமை எதிா்கொண்டது ஆஸி.
டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தோ்வு செய்தது. இதைத் தொடா்ந்து களமிறங்கிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை சோ்த்தது. பெத்மூனி 60 ( 2 சிக்ஸா், 6 பவுண்டரி), ரன்கலை விளாசினாா். மேக் லேன்னிங் 21, ஆஷ்லி காா்டனா் 20, எல்ஸி பொ்ரி 21 ரன்களை எடுத்தனா். நியூஸி தரப்பில் அன்னா பீட்டா்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
156 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
கேப்டன் சோபி டிவைன் 31, கேத்தி மாா்ட்டின் 37, மேடி கிரீன் 28 ரன்களை சோ்த்தனா்.
ஆஸி. தரப்பில் மேகன் ஸூட், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனா். ஜாா்ஜியா வோ்ஹாம் ஆட்ட நாயகியாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
இதன் மூலம் 4 ரன்களில் வெற்றி கண்ட ஆஸி. அரையிறுதிக்குள்ளும் நுழைந்தது.
ஏற்கெனவே இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.