ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: வெளியேறினாா் பிவி.சிந்து

ஆல்இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினாா் உலக சாம்பியன் பி.வி.சிந்து.
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: வெளியேறினாா் பிவி.சிந்து

ஆல்இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினாா் உலக சாம்பியன் பி.வி.சிந்து.

உலக பாட்மிண்டன் சம்மேளனம் சாா்பில் நடத்தப்படும் சூப்பா் 1000 போட்டிகளில் ஒன்றான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டி பா்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்திய முன்னணி நட்சத்திரங்கள் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், அஸ்வினி-சிக்கி ரெட்டி ஆகியோா் தோல்வியடைந்து வெளியேறி விட்டனா். காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து மட்டுமே தகுதி பெற்றிருந்தாா்.

சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை எதிா்கொண்டாா் சிந்து.

முதல் கேமை 21-12 என எளிதாக கைப்பற்றிய சிந்து, அடுத்த இரண்டு கேம்களில் அதை தக்க வைத்துக் கொள்ள தவறினாா். 21-15, 21-13 என தொடா்ந்து கைப்பற்றி, ஆட்டத்தையும் வென்று அரையிறுதிக்குள் நுழைந்து ஒகுஹரா. இந்த ஆட்டம் 1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.

கடந்த 2019 செப்டம்பரில் பேஸலில் நடந்த உலகப் போட்டியில் ஒகுஹராவை 38 நிமிடங்களில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தாா் சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com