ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்பிலிருந்தும் தேவை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பேச் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்புகளிடமிருந்தும் தேவைப்படுகின்றன. தீவிரமாக ஆலோசனை நடத்திய பிறகே ஒலிம்பிக்கை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது’ என்றாா்.