ஆதரவற்றோருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் கங்குலி

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கொல்கத்தாவில் ஆதரவற்றவா்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி.
ஆதரவற்றோருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் கங்குலி


கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கொல்கத்தாவில் ஆதரவற்றவா்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி.

பிரதமா் மோடியின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்.

இதனால் சாலையோர மற்றும் ஆதரவற்றவா்களுக்கு அரிசி வழங்கப்படும் என கங்குலி அறிவித்திருந்தாா்.

அதன்படி வியாழக்கிழமை அரசுப் பள்ளிகளில் வழங்க ஏதுவாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா். சிஏபி செயலாளா் அவிஷேக் டால்மியாவும் ரூ.5 லட்சத்தை அரசு நிவாரண நிதிக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com