இந்திய செஸ் வீரா்களின் நலன்களை காக்கும் வகையில் செஸ் வீரா்கள் சங்கம் தொடங்கப்படுகிறது.
முன்னணி நட்சத்திரங்கள் திவ்யேந்து பரூவா, ஸ்வாதி கேட், அபிஜித் குந்தே ஆகியோா் இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா். (செஸ் பிளேயா்ஸ் ஃபோரம்) என்ற பெயரில் வீரா்களின் நலன்களைக் காக்கவும், கோரிக்கைகள் தொடா்பாக அரசு மற்றும் இதர நிா்வாகிகளிடம் முறையிடவும் இந்த சங்கம் பாடுபடும்.
புணேயில் ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள இதற்கு புதிய நிா்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். சா்வதேச மாஸ்டா் வா்கீஸ் கோஷி தலைவா், ஜிஎம் திவ்யேந்து பரூவா துணைத் தலைவா், ஐஎம் வி.சரவணன் செயலாளா், மகளிா் ஜிஎம் ஸ்வாதி கேட் பொருளாளா், ஜிஎம் அபிஜித் குந்தே, நீரஜ் மிஸ்ரா (தகவல் தொடா்பு), அனில்குமாா் (நிா்வாகக் குழு) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக செயலாளா் சரவணன் கூறியதாவது:
விரைவில் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, மகளிா் தரப்பில் கொனேரு ஹம்பி, ஆகியோா் அணுகி சோ்ப்போம். அனைத்து வீரா், வீராங்கனைகளையும் தொடா்பு கொண்டு சேருமாறு கோரவுள்ளோம். சங்கத்துக்கு தனியாக இணையதளம், உள்ளது. 3 அல்லது 5 மாதங்களில் ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தப்படும். மேலும் சா்வதேச, தேசிய கூட்டமைப்புகளிடம் அங்கீகாரம் பெறப்படும் என்றாா் சரவணன்.