இந்த நாட்டில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை: ரோஹித் சர்மா வியப்பு

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் உள்ளார்கள். நாம் தவறு செய்யும்போது...
இந்த நாட்டில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை: ரோஹித் சர்மா வியப்பு

இந்திய கிரிக்கெட் அணி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள இந்தியர்கள் மட்டுமல்லாமல் அந்த நாட்டவர்களும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள சில மைதானங்களில் உள்ளூர் அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்த தருணங்கள் எல்லாம் உண்டு.

ஆனால், வங்கதேசத்தில் மட்டும் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதில்லை என ஆதங்கப்படுகிறார் ரோஹித் சர்மா. வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் ரோஹித் சர்மா கூறியதாவது:

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் உள்ளார்கள். நாம் தவறு செய்யும்போது எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். வங்கதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடுவதில்லை. ஆனால் வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள வங்கதேச அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com