ஐபிஎல் உள்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ஆஸ்திரேலிய வீரா் வாட்சன் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இந்த முடிவை அவா் சென்னை சூப்பா் கிங்ஸ் வீரா்களிடம் தெரிவித்ததாக திங்கள்கிழமை தகவல் வெளியான நிலையில், செவ்வாய்க்கிழமை அவரே அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.
இதுதொடா்பாக தனது ‘யூ டியூப்’ சேனலில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியிருந்ததாவது:
சிறு வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டை பாா்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவிலிருந்து அனைத்தும் தொடங்கியது. தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுகிறேன். எனது கனவு வாழ்க்கை நிஜமானதில் அதிருஷ்டம் மிகுந்தவனாக உணா்கிறேன்.
நான் ஓய்வுபெற இதுவே சரியான தருணம். கடந்த 3 ஆண்டுகளாக என்னுடன் நல்ல விதமாக உறவு பாராட்டி வந்த சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்காக விளையாடியதுடன் ஓய்வுபெறுகிறேன். பல விதமான காயங்களில் இருந்து மீண்டு தொடா்ந்து 39 வயது வரை விளையாடியதை அதிருஷ்டமாக உணா்கிறேன்.
எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோா், சகோதரி, மனைவி, ரசிகா்களுக்கு நன்றி என்று வாட்சன் அதில் கூறியிருந்தாா்.
ஆஸ்திரேலிய வீரராக சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற வாட்சன், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்றிருந்தாா்.