ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் ஸ்மித்திற்கு ரூ.12 லட்சம் அபராதம்
அபுதாபி: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாகப் பந்து வீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் ஸ்மித்திற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் பதிமூன்றாவது ஐ.பி.எல் போட்டித்தொடரில் செவ்வாயன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது 194 ரன்களைக் குவித்தது. பிறகு பேட் செய்த ராஜஸ்தான் அணியானது மும்பையின் பந்துவீச்சினைச சமாளிக்க இயலாமல் 136 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மெதுவாகப் பந்து வீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் ஸ்மித்திற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘மெதுவாகப் பந்து வீசுதல் தொடர்பான நடைமுறைகளில் இந்த ஐ.பி.எல் போட்டித்தொடரில் இது ராஜஸ்தான் அணிக்கு முதல் குற்றம் என்பதால் அணித்தலைவர் ஸ்மித்திற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.