போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியிலிருந்து விலகினார்.
இந்திய ரக்பி அணிக்கான விளம்பரதாரராக வரும் 2023-ஆம் ஆண்டுவரை செயல்படுவதற்கு ஒடிஸா அரசு இந்திய ரக்பி சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கரோனா சூழல் காரணமாக மூடப்பட்டுள்ள நீச்சல் குளங்களை மாநிலங்கள் திறக்காத வரை, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்தப்போவதில்லை என இந்திய நீச்சல் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஐ-லீக் கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டங்களில் எஃப்சி பெங்களூரு - ஏஆர்ஏ எஃப்சி, பவானிபூர் எஃப்சி - கர்வால் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிக்கொள்கின்றன.
லே நகரில் இருந்து மணாலி நகருக்கு, கடும் சவாலான 472 கி.மீ. மலைப்பகுதி சாலையில் 35 மணி நேரம், 25 நிமிடங்களில் சைக்கிளில் பயணித்து இந்திய ராணுவ அதிகாரி பரத் பன்னு சாதனை புரிந்துள்ளார்.
"எம்எம்ஏ' எனப்படும் தற்காப்புக் கலைகளை பயன்படுத்தி சண்டையிடும் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை ரிது போகட் வரும் 30-ஆம் தேதி கம்போடியாவின் நோவ் ஸ்ரெய் போவை சிங்கப்பூரில் எதிர்கொள்கிறார்.