பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், சக வீரர் பாருபல்லி காஷ்யப்பை, 2018-ல் திருமணம் செய்தார். இந்நிலையில் சாய்னா - காஷ்யப் ஆகிய இருவரும் மாலத்தீவில் தற்போது விடுமுறையைக் கழித்து வருகிறார்கள். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சாய்னா. இப்புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
டென்மார்க் ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக சாய்னா, காஷ்யப் ஆகிய இருவரும் சமீபத்தில் அறிவித்தார்கள். ஜனவரி முதல் போட்டியில் பங்கேற்பேன் என சாய்னா தெரிவித்துள்ளார்.