இந்த வருடத்துக்கான ஐபிஎல் அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐபிஎல் சேர்மன் தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை செப்டம்பர் 6 அதாவது நாளை வெளியிடப்படும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.