மீண்டும் களமிறங்குகிறார் யுவ்ராஜ்: பிசிசிஐ-க்கு கடிதம்

​வரவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
மீண்டும் களமிறங்குகிறார் யுவ்ராஜ்: பிசிசிஐ-க்கு கடிதம்


வரவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு யுவ்ராஜ் சிங் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, பிக் பேஷ் ஆஸ்திரேலிய டி20 லீக் போட்டியில் விளையாட யுவ்ராஜ் சிங் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல்வேறு வெற்றிகளுக்கு வித்திட்ட யுவ்ராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஒரு வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

304 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடி 8,701 ரன்களும், 40 டெஸ்டுகளில் விளையாடி 1,900 ரன்களும், 58 டி20 ஆட்டங்களில் விளையாடி 1,177 ரன்களும் யுவ்ராஜ் சிங் எடுத்துள்ளார். டெஸ்டில் 3 சதங்களும் ஒருநாள் ஆட்டங்களில் 14 சதங்களும் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com